About Me

My photo
ஓடுபவைகளை பிடிக்க நடந்து கொண்டிருப்பவன்

Tuesday, July 22, 2008

பழங்கதை - ஹஜியின் சியாம் (பேங்காக்) பயணம்

ஹஜி கப்பல் மூலமாக பினாங் (மலேசியா) வழியாக நாகபட்டினத்திலிருந்து சியாம் பயணமாகிறார். அங்கே குலாமின் மரணத்திற்கு பிறகு பல நாட்களாக மூடியிருந்த கடையை திறக்கிறார். அவர் மனதிற்குள் எண்ண ஓட்டங்கள். இந்த கடையையே புரட்டி போட வேண்டும் என்று. 'நாகூர் ஸ்டோர்ஸ்' என்று பெயரிடப்பட்டு புதுப் பொலிவு பெறுகிறது அந்த கடை. சிறுக சிறுக சேர்த்து கடையை ஒரு நிலைக்கு கொண்டு வருகிறார். வியாபாரம் சூடு பிடிக்கிறது, அவரது வாழ்க்கையிலும்

Saturday, July 12, 2008

பழங்கதை சுருக்கம் - 2

பெரிய செல்வந்தரும் வியாபாரியுமான குலாம் பாதியிலேயே வுட்டுட்டு போன வியாபாரம் ஹஜியின் கைகளுக்கு வந்தது. ஹஜியோ தையல் கடை வைச்சு துணி தச்சு கொடுத்து வவுத்து பசிய ரெண்டு வேலை மட்டும் ஓட்டிக் கொண்டும் ஒரு வேலை காய்ஞ்சுக் கொண்டும் இருந்தவர். இவருக்கு வெளிநாட்டுக் கெல்லாம் போய் பொழைப்பு நடத்த வேண்டிய நிர்பந்தம். அவருக்கு 3 கொழந்தைங்க. தங்கச்சி புள்ளைங்க வேற. தவிர, குலாமின் 6 புள்ளைகளும் இருக்கு. எல்லாத்தையும் கட்டி காக்கணும். இவரோ தனி மரம். தனி மரம் தோப்பாகாது தான், ஆனா இங்கே ஒரு தனி மரம் தான் தோப்பையே கட்டி காத்தது.

Monday, May 19, 2008

பழங்கதை சுருக்கம் - 1

குலாம் என்பவர் மிகச் சிறந்த வியாபாரி. நாகூர் முஸ்லீம்களுக்கு மிகவும் பிரசித்தமான ஊர். சொந்த ஊரான குன்னூரிலிருந்து வியாபார நிமித்தமாக நாகூர் வந்த குலாம் அந்த ஊரின் அப்போதைய அமைதியின் பால் ஈர்க்கப்பட்டு நாகூரிலேயே தங்க முடிவு செய்தார். அவரின் வியாபாரம் அயல் நாட்டையும் அடைந்தது.

தாய்லாந்த் தலைநகரம் பேங்கோக் அப்போது சியாம் என்று அழைக்கப்பட்டது. அந்த ஊரில் வியாபரத்தை தொடங்கிய அவர் வாரிசையும் உருவாக்க எண்ணினார். யாயி என்ற ஒரு சியாம் நாட்டு பெண்ணை மணந்தார். வரிசையாக (4 ஆண்கள் + 2 பெண்கள்) 6 பிள்ளைகள். அனைவரையும் கூட்டிக் கொண்டு நாகூர் வந்தார்.

தனது வாழ்க்கை முடிவுக்கு வருவதை உணர்ந்த அவர் அப்போது அந்த முடிவை எடுக்கிறார். தனது வியாபாரம், பிள்ளைகள் யாவற்றையும் தனது உறவினரான ஹஜியிடம் அமானிதமாக ஒப்படைக்கிறார்.

இனி இந்த கதை எழுத்து வழக்கிலல்லாமல் பேச்சு வழக்குலேயே தொடரும்

தொடரும்

Thursday, May 15, 2008

புனித மக்கா நகரில் ஒரு நாள்

அனைவருக்கும் அமைதி நிலவட்டுமாக.. தலைப்பை பார்த்து விட்டு இது பெருமானார் சம்மந்தப்பட்ட ஹதீஸ் பற்றியது என்று நினைத்து கொள்ளாதீர்கள்..

ஒரு நாள் அந்த பெண்மணி புனித மக்கா நகரில் ஹ்ஜ் பயண கிரியைகளை செய்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இஸ்மாயீல் நபி சம்மந்தப்பட்ட இடத்தை காட்டப்பட்டது. அவர்கள் இஸ்மாயீல் நபியின் நினைவாக இருக்கும் போது தான் அந்த செய்தி சொல்லப்பட்டது.

'உங்க மருமஹ் சூலியா இருக்காஹலாம்.."

அப்போதே சொன்னார்கள் ஆச்சிமா என்று எங்களால் அழைக்கப்படும் அந்த பெண்மணி, "பொறக்குற கொழந்தைக்கு இஸ்மாயீல்ன்னு தான் பேரு வக்கணும்" என்று

ஆச்சிமாவின் மாப்பிள்ளை காலமாகி விட்டதால் அவர்களின் நினைவாக முஹம்மது தம்பி என்ற அவர்களின் பெயரை விடலாம் என்று எண்ணியிருந்த அந்த குழந்தைக்கு முஹம்மது இஸ்மாயில் என்று பெயரிடப்பட்டது.