About Me

My photo
ஓடுபவைகளை பிடிக்க நடந்து கொண்டிருப்பவன்

Monday, May 19, 2008

பழங்கதை சுருக்கம் - 1

குலாம் என்பவர் மிகச் சிறந்த வியாபாரி. நாகூர் முஸ்லீம்களுக்கு மிகவும் பிரசித்தமான ஊர். சொந்த ஊரான குன்னூரிலிருந்து வியாபார நிமித்தமாக நாகூர் வந்த குலாம் அந்த ஊரின் அப்போதைய அமைதியின் பால் ஈர்க்கப்பட்டு நாகூரிலேயே தங்க முடிவு செய்தார். அவரின் வியாபாரம் அயல் நாட்டையும் அடைந்தது.

தாய்லாந்த் தலைநகரம் பேங்கோக் அப்போது சியாம் என்று அழைக்கப்பட்டது. அந்த ஊரில் வியாபரத்தை தொடங்கிய அவர் வாரிசையும் உருவாக்க எண்ணினார். யாயி என்ற ஒரு சியாம் நாட்டு பெண்ணை மணந்தார். வரிசையாக (4 ஆண்கள் + 2 பெண்கள்) 6 பிள்ளைகள். அனைவரையும் கூட்டிக் கொண்டு நாகூர் வந்தார்.

தனது வாழ்க்கை முடிவுக்கு வருவதை உணர்ந்த அவர் அப்போது அந்த முடிவை எடுக்கிறார். தனது வியாபாரம், பிள்ளைகள் யாவற்றையும் தனது உறவினரான ஹஜியிடம் அமானிதமாக ஒப்படைக்கிறார்.

இனி இந்த கதை எழுத்து வழக்கிலல்லாமல் பேச்சு வழக்குலேயே தொடரும்

தொடரும்

No comments: